ஈரோடு: பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மிரட்டிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரை அடுத்து பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் மீது குன்னத்தூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.