உளுந்தூர்பேட்டை: முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த எலவனாசூர்கோட்டை அதிமுக நிர்வாகி திவாகர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக கிளை செயலாளர் திவாகரை எலவனாசூர்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து வாட்ஸ்ஆப் குழுவில் திவாகர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.