ஏலகிரி : ஏலகிரி மலையில் உள்ள செயற்கை நீரூற்றில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்ந்தனர்.ஜோலார்பேட்டை அருகே ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.
இது உயர்ந்த பகுதியில் இயற்கை நிறைந்த குளிர்ந்த பிரதேசமாக காட்சியளிக்கிறது. இங்கு தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பொழுதை போக்கி செல்கின்றனர். இங்கு முக்கிய சுற்றுலா தலங்களான இயற்கை பூங்கா, படகு இல்லம், சாகச விளையாட்டுகள், பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவை உள்ளது.
இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று முன்தினம் இயற்கை பூங்காவில் சுற்றுலா பயணிகள் செயற்கை நீரூற்றில் விளையாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, புகைப்படம் எடுத்து கொண்டனர். இயற்கை பூங்காவில் உள்ள கடைகளில் ஆங்காங்கே குப்பைகள் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.