நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 1ம் தேதி முதல் மைனஸ் இல்லாத விலையை என்இசிசி நிர்ணயம் செய்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்த தினமும் பண்ணையாளர்கள், வியாபாரிகள் சந்திப்பு கூட்டங்களை என்இசிசி நடத்தி வருகிறது.
நாமக்கல்லில் என்இசிசி அறிவிக்கும் விலைக்கே, தற்போது வியாபாரிகள் முட்டைகளை வாங்கி செல்கிறார்கள். கடந்த 1ம் தேதி 405 காசுகளாக இருந்து முட்டை விலை, நேற்று 10 காசுகள் உயர்த்தப்பட்டு, பண்ணை கொள்முதல் விலை 445 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.