சென்னை: அயர்லாந்தில் கல்வி மற்றும் அங்குள்ள வேலைவாய்ப்புகள் குறித்து இந்திய மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், எஜுகேஷன் இன் அயர்லாந்து சார்பில் சென்னையில் 2 நாள் கல்விக்கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டன. இந்த கண்காட்சி குறித்து எஜுகேஷன் இன் அயர்லாந்து நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான பிராந்திய மேலாளர் பாரி ஓடிரிஸ்கால் கூறுகையில்,
‘‘அயர்லாந்து பல்கலை பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து மாணவர்கள் கேட்டறிந்தனர். ஒவ்வோர் ஆண்டும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அயர்லாந்திற்கு படிப்பிற்காக வருகின்றனர். கல்வித் திட்டங்கள் உதவித்தொகை மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் பற்றிய விரிவான தகவல்களையும் அவர்கள் கேட்டறிந்தனர்’’ என்றார்.