சென்னை: அதிமுகவில் 2ம் கட்ட தலைவர்களில் ஒரு தரப்பினர் பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டும்எனவும், மற்றொரு தரப்பினர் கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறுவதால் முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முடிந்த பிறகு, பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என கூறப்படுகிறது.