திண்டுக்கல்: ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் சிறையில் உள்ள ED அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கித் திவாரியின் நீதிமன்ற காவலை மார்ச் 20ம் தேதி வரை நீட்டித்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜரான அங்கித் திவாரியின் நீதிமன்ற காவல் 7வது முறையாக நீட்டிக்கப்பட்டது.