ஈக்வடார்: தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களில் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளராக அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரும் பத்திரிகையாளருமான பெர்னாண்டோ (59) இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை கிட்டோ நகரில் பெர்னாண்டோ பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.
மக்களிடம் ஆதரவை கோரியபடி பிரசாரத்தை முடித்துவிட்டு காரில் ஏற முயன்றார். அந்த நேரத்தில், அடையாளம் தெரியாத ஒருவர், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே பெர்னாண்டோ உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் பெர்னாண்டோவின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு அந்நாட்டின் அதிபர் மற்றும் சக வேட்பாளர்கள் இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.