சிலி: சிலி நாட்டின் சான்டியாகோவில் இருந்து 524 கி.மீ தொலைவில் இந்திய நேரப்படி இன்று காலை 7.1 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 அலகுகளாக பதிவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் நிலநடுக்கத்தை உணர்ந்த சிலர், வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.