சென்னை : மாயமான தனது மகன் வெற்றி துரைசாமி பற்றி தகவல் அளித்தால் ரூ.1 கோடி சனமானம் வழங்குவதாக சைதை துரைசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இமாச்சலப்பிரதேசம் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் மாயமான வெற்றி துரைசாமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாச்சல் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். கோபிநாத என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.