நெல்லை: கனமழை வெள்ளத்தால் நெல்லை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, நெல்லை-கோவில்பட்டி சாலை துண்டிக்கப்பட்டதால் மக்கள் தவிப்பு. நெல்லை புதிய பேருந்து நிலையம்-அம்பை சாலை முன்னீர்பள்ளம் முதல் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பேட்டை-பழைய பேட்டை, நெல்லை டவுன்- சேரன்மகாதேவி சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது. முக்கூடல்-கடையம் சாலை, இடைகால்-ஆலங்குளம், அம்பை-கல்லிடைக்குறிச்சி சாலையும் வெள்ளத்தில் மூழ்கியது.