கோவை: வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் டிடிவி தினகரனின் அமமுக காணாமல் போய்விடும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். காலதாமதமாக வரி செலுத்தினால் அபராதம் விதிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.