Thursday, May 9, 2024
Home » அன்று வறட்டிகள் என்ன செய்தன?

அன்று வறட்டிகள் என்ன செய்தன?

by Kalaivani Saravanan

அந்த நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டியை காய வைக்க வேண்டும்? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது? ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டியை காய வைக்கும் பழக்கம் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.!

அப்போதெல்லாம் தடுப்பூசியோ, மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம், பசு வறட்டியில் உள்ளது. ஆம்! நாட்டு மாடுகளின் A2 சாணம் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் அடிக்க முடியாது என்பதால், வீட்டுச்சுவரில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள், இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு, அந்த வீடே அணுக்கதிர்கள்கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால், இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம், கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடு களில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதயக் கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்து கொண்டுதான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். நாமும் அவ்வாறே.. மீண்டும் நம் முன்னோர்களின் வழிகளில் பயணிப்போம்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi