சென்னை: கச்சா எண்ணெய் கப்பல் மீதான டிரோன் தாக்குதலை அடுத்து கடற்படை போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன. சவுதியில் இருந்து மங்களூருக்கு புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.வி. செம் என்ற கப்பல் மீது நடந்த தாக்குதலில் கப்பல் தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்ட போதும் அதன் இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.