Friday, May 17, 2024
Home » வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

by MuthuKumar

வடலூர்: காதல் திருமணம் ெசய்து கொண்ட இளம்பெண் வரதட்சணை கொடுமையால் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே சம்மட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகள் சசிகலா (21). இவரும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பார்த்தசாரதி (25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் பார்த்தசாரதி, அவரது தாய், தம்பி, அக்கா ஆகியோர் சசிகலாவிடம் உங்கள் பெற்றோரிடம் சென்று பணம், நகைகளை வாங்கி வரும்படி அடிக்கடி வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பும் இதே போன்று பிரச்னை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சசிகலா நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சசிகலாவை அவரது உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அவரது தாய் செல்வி, தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், மாமியார், அவரது தம்பி, அக்கா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், பெண்ணின் கணவர் பார்த்தசாரதி, மாமியார், கணவரின் தம்பி, அக்கா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

3 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi