புதுடெல்லி: எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் வழக்கங்கப்பட்ட புகார் மனுக்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை நீதிபதி சச்சின் தத்தா அமர்வு விசாரித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம். இருப்பினும் அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பாக மனுதாரர் வைத்த கோரிக்கை குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உடனடியாக பரிசீலிக்க ஆணை பிறப்பிக்கிறோம்.
அதேநேரத்தில் இந்த கோரிக்கை கொண்ட புதிய மனுவை தேர்தல் ஆணையத்தில் மனுதாரர் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது என உத்தரவிட்டார்.