சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., வெளியிட்ட அறிக்கை: திமுக மாணவர் அணி மாவட்ட, மாநில அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற 29ம் தேதி காலை 10 மணியளவில் கோவை பீளமேடு, காளப்பட்டி சாலை “சுகுணா கலையரங்கில்”, எனது தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., சிறப்புரையாற்றிட, மாநில மாணவர் அணித் தலைவர் ராஜீவ்காந்தி- இணைச் செயலாளர்கள் பூவை ெஜரால்டு, எஸ்.மோகன் மற்றும் துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூரணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் மாவட்ட, மாநில அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் வரும் 1ம் தேதி சென்னையில் யுனைடெட் ஸ்டூடன்ஸ் ஆப் இந்தியா கூட்டமைப்பின் சார்பில் நடைபெற உள்ள மாபெரும் மாணவர் பேரணி. கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சு மற்றும் கட்டுரை இறுதிப் போட்டி. மாணவர் அணி ஆக்கப் பணிகள்-குறித்து விவாதிக்கப்படும்.