சென்னை: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய புகழேந்தி, நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற முதல்வர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அப்போது மேடையிலேயே மயங்கி விழுந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புகழேந்திக்கு ஐசியூவில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. காவல்துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உயிர் பிரிந்தது.
1973-ல் திராவிட முன்னேற்ற கழகத்தின் கிளைச் செயலாளராக பணியைத் தொடங்கி, பொதுக்குழு உறுப்பினர் ஒன்றிய செயலாளர் அதன் பின், 1997-ல் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் போன்ற மிகச் சிறப்பாக கழக பணியாற்றியும், அந்தியூர் திருவாதி ஊராட்சி மன்ற தலைவர், கோலியூர் ஒன்றிய பெருந்தலைவர் பின் 2021 இல் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் போன்ற மக்கள் பணியாற்றியும், இன்று (06.04.2024) தீவிர சிகிச்சைக்கு பின் உடல்நலக்குறைவால் மறைந்த திரு.புகழேந்தி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.