சென்னை: திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக மாணவர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 18ம்தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. எனது தலைமையிலும், மாணவர் அணி தலைவர் இரா.ராஜீவ்காந்தி, மாணவர் அணி இணை செயலாளர்கள் சி.ஜெரால்டு, எஸ்.மோகன் முன்னிலையிலும் நடைபெறும். கூட்டத்தில் அனைவரும்கலந்து கொள்ள வேண்டும். இந்திய அளவில் மாணவர் கூட்டமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.