Wednesday, May 22, 2024
Home » திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ராயபுரம் ெதாகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு: பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு

திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ராயபுரம் ெதாகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு: பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு

by MuthuKumar

தண்டையார்பேட்டை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, இன்று ராயபுரம் மேற்கு பகுதிக்குட்பட்ட வண்ணாரப்பேட்டை சுப்பராயன் தெருவில் இருந்து பிரசாரம் தொடங்கினார். பின்னர் சோலையப்பன் தெரு, நல்லப்பவாத்தியார் தெரு, மேற்கு கல்லறை சாலை, டிஎச்ரோடு, சண்முகராயன் தெரு, பசுவைய்யன் தெரு, மண்ணப்பன் தெரு, நைனியப்பன் தெரு, முத்தையா முதலி தெரு, அஜீஸ் முகமது தெரு, தர்மராஜா கோயில் தெரு, சீனிவாசபுரம், போஜராஜன் நகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள், பூக்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், ”தமிழக முதல்வர் செய்த திட்டங்களை மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள். இதனால் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போது வடசென்னை வளர்ச்சிக்கு குறைவான நிதியை ஒதுக்கினார்கள். ஆனால் முதல்வர், தற்போது 4000 கோடி ரூபாயை வடசென்னைக்கு ஒதுக்கி பல்வேறு திட்ட பணிகளை செய்து கொடுக்க உள்ளார். இதற்கான பணி தற்போது நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் நிதி, மாமன்ற உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் இந்த பகுதியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தில் நவீன மயமாக்கும் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் மகளிருக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் முதல்வர். அதை எண்ணி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்றார். அப்போது, மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர், எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, இளைய அருணா, பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், ராயபுரம் தேர்தல் பார்வையாளர் நவீன், தலைமை செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன், வழக்கறிஞர் மருது கணேஷ், வட்ட செயலாளர்கள் பாலன், கௌரீஸ்வரன், ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சோமசுந்தர மூர்த்தி, விஜயகுமார், மாணவரணி துணை அமைப்பாளர் முகேஷ்குமார், இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரவியம், மதிமுக மாவட்ட செயலாளர் ஜீவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சௌந்தர், கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, முஸ்லிம் லீக் கட்சியினரும் வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

8 − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi