சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (9-3-2024) கலந்து பேசியதில், 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதாக தெரிவிக்கபட்டுள்ளது.
வருகிற 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது. திமுக கூட்டணிக்கு வரும் மக்களவை தேர்தலில் எங்களின் ஒத்துழைப்பு இருக்கும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.