புதுடெல்லி: நாடு முழுவதும் 543 தொகுதிகளில் மக்களவை தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க மத்திய புலனாய்வு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன. அதன்படி, தலைமை தேர்தல் ஆணையருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கு முன், டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.