நல்லம்பள்ளி, ஆக.28: தொப்பூர் கணவாயில் நேற்று காலை பூ பாரம் ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கால்முறிந்து விவசாயி படுகாயமடைந்தார்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பகுதியில் இருந்து தொப்பூருக்கு நேற்று காலை பூ பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு ஆட்டோ புறப்பட்டது. தொப்பூர் கணவாய் பகுதியில் சென்றபோது, திடீரென தறிகெட்டு ஓடிய ஆட்டோ சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆடடோவில் பயணம் செய்த நார்த்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி பேரரசு(எ)தீனா(24) என்பவர் கால் முறிந்து படுகாயமடைந்தார். மேலும், டிரைவரும் படுகாயமடைந்தார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விபத்தில் சிக்கித் தவித்த 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.