புதுடெல்லி: டெல்லியில் உள்ள இந்திய மக்கள் தொகை அறிவியல் மையத்தின் (ஐஐபிஎஸ்) இயக்குனராக இருந்தவர் கே.எஸ்.ஜேம்ஸ். இந்த நிறுவனத்தில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இந்த மையத்தின் இயக்குனர் ஜேம்சை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய சுகாதாதர அமைச்சகம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஐஐபிஎஸ் மையம் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ஐஐபிஎஸ் மையத்தில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரிக்க உண்மை கண்டறியும் குழு கடந்த மே மாதம் அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தன.
ஐஐபிஎஸ் இயக்குனர் அதிரடி சஸ்பெண்ட் ஒன்றிய அரசு அதிரடி
previous post