திண்டிவனம் : திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. அப்போது கிடங்கல் 2 ராஜன் தெருவில் வசிக்கும் ரமணிதேவி (42) என்பவர், அவரது 3 குழந்தைகள், அவரது தாயுடன் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில் ரமணிதேவி பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், பாதிக்கப்பட்ட வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.