திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே உலகம்பட்டியில் புனித பெரிய அந்தோணியார் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும் 430 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை கோட்டாட்சியர் கமலக்கண்ணன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.