ஈரோடு: திண்டல் தெற்குபள்ளம் அருகே தனியார் பள்ளி ஆசிரியர் வித்யா வீட்டில் 17 சவரன் நகை, ரூ. 8,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டுக்கு ஆசிரியர் வித்யா சென்றிருந்த நிலையில் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். வித்யா அளித்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.