சென்னை: 2023 இறுதிக்குள் அனைத்து வகையான சேவைகளுக்கும் டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் சான்றிதழ்களை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போது பிறப்பு, இறப்பு, சுகாதார சான்றிதழ், திட்ட அனுமதி ஆகியவை டிஜிட்டல் முறையில் செல்லுபடியாகும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வர்த்தக உரிமம், சொத்து வரி மதிப்பீட்டு, தொழில்முறை வரி மதிப்பீடு போன்ற சேவைகளுக்கான டிஜிட்டல் சான்றிதழ்கள் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.