சென்னை: நீட் தேர்வு எழுதி, மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவர், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தன்னை இயலாதவர் என்று கருதி, இடஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு நாளுக்கு இரு முறை இன்சுலின் செலுத்திக் கொள்ளும் தனக்கு சிறப்பு பிரிவில் மருத்துவ மாணவர் சேர்க்கை வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கோரினார். மருத்துவக் கல்வி இயக்குனரக தேர்வுக் குழு தரப்பில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை இயலாமை என்ற பிரிவினராக கருதுவது குறித்து மாநில அரசு தான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். தேர்வுக் குழுவுக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை குறித்து மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி மாணவியின் மனுவை தள்ளுபடி ெசய்து உத்தரவிட்டார்.