மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்துக்கு குடிநீர் குழாய் கொண்டுவர போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியர், எஸ்.பி. உரிய உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தேவிபட்டினம் குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஜமீன்தார் வலசை கிராமத்தில் இருந்து குடிநீர் குழாய் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய் கொண்டுவர போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஹமிதியா ராணி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.