அண்ணாநகர்: நொளம்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் ஏற்பாட்டில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், இணை ஆணையர் மனோகர், உதவி ஆணையர் வரதராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உடன் இருந்தனர். பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு பேசுகையில், ‘‘பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் கிளப் சென்னையில் 110 உள்ளது. போலீஸ் பாய்ஸ் கிளப்பை சுமார் 19 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த நூலகத்தில் பாய்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள் மற்றும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிறுவர்கள் தினமும் வந்து படிக்கலாம்’’ என்றார். இதுகுறித்து நொளம்பூர் போலீசார் கூறுகையில், ‘‘காவல்நிலையங்களுக்கு மனு கொடுக்க வருவோர் காத்திருக்கும் நேரத்தில் இந்த நூலகத்தை பயன்படுத்தி நூல்களை படிக்கலாம்,’’ என்றனர்.