சென்னை: தேவநேயப் பாவாணர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: நாம் செல்லும் தமிழ்வழி பயணத்துக்கு ஊக்கமளித்திட்ட திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆழமான தமிழறிவும் அசைக்க முடியாத இன உணர்வும் கொண்ட தமிழ்ச்சீயம் பாவாணர் என தலைவர் கலைஞர் அவரது புகழ் பாடினார். பாவாணரின் தமிழ்த்தொண்டை போற்றி, தமிழ் காக்கும் கடமையில் உறுதியோடு நிற்க உரம் பெறுவோம்.