சென்னை: தேமுதிக அலுவலகத்திற்கு கேப்டன் விஜயகாந்தின் உடல் கொண்டுவரப்பட்டது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டிற்கு விஜயகாந்தின் உடல் கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. குடும்ப முறைப்படி விஜயகாந்திற்கு இறுதிச் சடங்கு நடக்க உள்ளது. இறுதிச் சடங்குகள் முடிந்ததும் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.