வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்திற்கு நேற்று வந்த தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ், அங்கு அலங்கரிக்கப்பட்ட விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினார். அப்போது, நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘தேமுதிக தமிழகத்தில் வளர்ந்து பெரிய கட்சியாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்டேன். தற்போது அதை விட அதிகமான வரவேற்பு வரும் தேர்தலில் போட்டியிட தனக்கு கிடைத்துள்ளது. இனிவரும் தேர்தல்களில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தலைமையில் தேமுதிக வீர நடைபோடும்’ என கூறினார். செம்பேடு கிராமம் பிரேமலதாவின் சொந்த ஊர்.