பொன்னேரி: மீஞ்சூர் பஜாரில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிறிஸ்தவ திருச்சபை சார்பில் கண்டன நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆதித்தமிழர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் ரோமன் கத்தோலிக், இசிஐ, சிஎஸ்ஐ சர்ச் ஆஃப் காட், ஏஜி, ஏசிஏ, சர்ச் ஆப் கிரிஸ்ட், பெந்தகொஸ்தே திருச்சபை மற்றும் அனைத்து சுயாதீன திருச்சபை போதகர்களும் அந்த திருச்சபைகளின் மக்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.