டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. 9 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராமல் இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர். மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.