டெல்லி : நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில் ஆட்கொணர்வு மனுவை LIVE டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கில் கைதான 6 பேரில் நீலம் ஆசாத் என்ற பெண் அடிப்படை உரிமை மீறப்படுவதாகக் கூறி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின் போது, நீலம் ஆசாத்தின் ஜாமீன் மனு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் இவ்வழக்கை எடுக்கக்கூடாது என்று காவல்துறை வாதிட்டது. வாதத்தை ஏற்று ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்.