டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்து உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கிறது.