டெல்லி: டெல்லியில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல், நித்தியானந்த் ராய் ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் தேவை என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.