Tuesday, May 21, 2024
Home » டெல்லி தாடிக்காரர் பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றார் 3 முறை முதல்வர் ஓபிஎஸ் பலாப்பழம் விற்கிறார்: எடப்பாடி இலந்தைப் பழம் விற்பார்; லியோனி ‘செம கலாய்’

டெல்லி தாடிக்காரர் பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றார் 3 முறை முதல்வர் ஓபிஎஸ் பலாப்பழம் விற்கிறார்: எடப்பாடி இலந்தைப் பழம் விற்பார்; லியோனி ‘செம கலாய்’

by Ranjith

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: டெல்லியிலிருந்து ஒரு தாடிக்காரர் தமிழ்நாட்டிற்கு 5 தடவை வந்து, ஐந்து காசுக்கு பிரயோஜனம் இல்லாத லேகியம் விற்றதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ராசி இல்லாதவர்;

அவருக்கு கட்டம் சரியில்லை என்கிறார். எடப்பாடி பழனிசாமி கடப்பாறையை முழுங்கிவிட்டு சுக்கு கசாயம் குடித்தால் பிரச்னை தீராது. எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு அதிமுக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை தான் சந்தித்து வருகிறது. அதிமுகவினர் தோல்வியால் சோகப்பாடல் பாடிக்கொண்டிருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி போர்டு இல்லாத இல்லாத பஸ் டிரைவர். எந்த ஊருக்கு எங்கு போகிறோம் என்று தெரியாமலே, அதனை ஓட்டி சென்று கொண்டிருக்கிறார்.

மூன்று முறை தமிழக முதல்வராய் இருந்த ஓபிஎஸ் இன்றைய தினம் ராமநாதபுரத்தில் பலாப்பழம் விற்றுக் கொண்டிருக்கிறார். இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் சேர்ந்து ஒரு கட்சியை நாசப்படுத்தி விட்டனர். பிரதமர் மோடி ஒரு அரசியல் கட்சித் தலைவரை கட்டிப்பிடித்தால் அந்தக் கட்சியே இரண்டாகி விடும். தற்போது பாமக கட்சியை சேர்ந்த ராமதாசை கட்டிப்பிடித்திருக்கிறார். அரசியலை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி இலந்தைப் பழம் விற்க போகலாம். எடப்பாடி பழனிசாமிக்கு ஜென்ம சனி பிடித்துள்ளது. அது சாகும் வரை அவரை விடாது.

இந்த தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு தராவிட்டால் எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு போய்விடுவாரா? பாஜ வேட்பாளர் ராதிகா நல்ல நடிகை. முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாத அவரை பார்க்க வேண்டும் என்று சென்னைக்கு போனால், ஆறு காவலாளிகளை கடந்து தான் அவரை பார்க்க முடியும். மறைந்த விஜயகாந்திற்கு அரசு மரியாதை கொடுத்து நல்லடக்கம் செய்த திமுகவுக்கு தான் மனசாட்சி உள்ள தேமுதிகவினர் ஆதரவு கொடுப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

You may also like

Leave a Comment

thirteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi