டெல்லி: டெல்லியில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லியில் கைதுசெய்யப்பட்ட 3 தமிழர்களிடம் இருந்து ரூ.75 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தேங்காய் பவுடர் என்ற பெயரில் ரூ.2,000 கோடி போதைப்பொருளை கடந்த 3 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு கடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை தேடி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.