டெல்லி: டெல்லி சம்பு எல்லையில் போலீசாரின் கண்ணீர் புகைக்குண்டு வீச்சால் உடல்நலம் பாதிக்கப்பட்ட விவசாயி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான விவசாயி ஞான சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் ஞான சிங்கும் டெல்லியை நோக்கி பேரணியாக வந்துகொண்டிருந்தார்.