சென்னை: அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரிய சி.வி.சண்முகம் மனு மீதான வழக்கில் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். 12 மணி நேர வேலைநேரம், கஞ்சா புழக்கம் உள்ளிட்ட விவகாரத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் சி.வி.சண்முகம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.