டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. குஜராத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் 68 பேருக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அமர்வு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.