ராணிப்பேட்டை: அரசியல் தலைவர்கள், முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக பாமக நிர்வாகி தின புரட்சி ராஜேந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி பூட்டுதாக்கு பகுதியில் நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக ராஜேந்திரன் மீது புகார் அளிக்கப்பட்டது. வாலாஜாபேட்டை பாமக நிர்வாகி தினபுரட்சி ராஜேந்திரன் மீது ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.