மதுரை: தூத்துக்குடியில் ஆழ்கடல் பகுதியில் சங்கு எடுக்க அனுமதி வழங்க உரிமம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிர்கோள காப்பகமாக ஒன்றிய அரசு அறிவித்துள்ள நிலையில் சங்கு எடுக்க அனுமதி என புகார் எழுந்துள்ள நிலையில், இதுவரை எல்லை வரையறுக்கப்படாததால் ஆழ்கடலில் மூழ்கி சங்கு எடுக்க உரிமம் வழங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஜான்சன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.