சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த நிலையில் பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது வருமான வரித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடை பெற உள்ளது. இதனை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு தனி நபரோ அல்லது கட்சியோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம் அல்லது இலவச பொருட்களை விநியோகிப்பது பற்றிய புகார்களை / தகவல்களை தெரிவிக்க விரும்பினால் வருமான வரி அலுவலகத்தில் உள்ள 1800 425 6669 கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் tn.election complaints2024@incometax. gov.in மின்னஞ்சல் மூலமாகவும் 9445394453 என்ற புலனம் (whatsapp) மூலம் தொடர்பு கொள்ளலாம், புகார் அளிக்கலாம்.