விருதுநகர்: கொலை மிரட்டல் விடுப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் மீது மகளிர் அணி நிர்வாகி ரீட்டா புகார் தெரிவித்துள்ளார். விருதுநகர் எஸ்.பி. அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணி நிர்வாகி ரீட்டா அதிமுக எம்.எல்.ஏ. மீது புகார் அளித்துள்ளார். தன் மீதான வழக்கை திரும்பப் பெறக் கூறி அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் கொலை மிரட்டல் விடுப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.