Monday, May 27, 2024
Home » நீட் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது

நீட் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது

by Arun Kumar

டெல்லி: நீட் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக பீகார் மட்டுமின்றி ஜார்க்கண்ட், ராஜஸ்தானிலும் மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. எம்பிபிஎஸ்., பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று (05-05-2024) தொடங்கியது.

2024-25ம் ஆண்டிற்கான இடைநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் 557 நகரங்களில் நீட் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்தது. ஜூன் 14ஆம் தேதி முடிவு வெளியாகிறது.

இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடித்துள்ளனர். நவி மும்பியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் விவாடியைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளன. நேற்று நீட் தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை வெடித்த நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமானது.

நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 14 பேர் பீகார் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை மறுத்து வரும் நிலையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 14 பேரை கைது செய்தனர். நீட் வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக பீகார் மட்டுமின்றி ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களிலும் மோசடி நபர்களை கைது செய்துள்ளனர். ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

4 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi