மபி புதிய முதல்வராக மோகன்யாதவ் இன்று பதவி ஏற்கிறார். நேற்று மபி முதல்வர் இல்லத்திற்கு சென்ற ஏராளமான பெண்கள் முதல்வர் பதவியில் இருந்து விலகிய சிவராஜ்சிங் சவுகானை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். அவர்களை தேற்றிய சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது: எனக்காக பதவி கேட்பதை விட செத்துப்போவது மேல். கட்சி எனக்கு எந்த பணியை கொடுத்தாலும் அதை நிறைவேற்றுவேன்.
எனவே நான் டெல்லி சென்று எனக்காக ஏதாவது கேட்பதை விட இறப்பதே சிறந்தது என்று தாழ்மையுடன் சொல்ல விரும்புகிறேன். அதனால் தான் பதவி கேட்டு எதையும் நான் செய்யவில்லை. ஒருவர் சுயநலமாக இருக்கும்போது, அவர் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார். ஆனால் பாஜவில் ஒவ்வொரு ஊழியருக்கும் சில வேலை இருக்கிறது. எனக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையையும் நான் செய்வேன்’ என்றார்.